உங்களுக்கு பிடிக்காததை தொடர்ந்து செய்வேன்.. மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் நேரடி சவால்
சென்னை: ஊடகம் ஒன்றுக்கு முதலீட்டு அனுமதி கொடுப்பதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.90 லட்சம் லஞ்சமாக பெற்றதாக அமலாக்கப்பிரிவு வழங்கிய தகவலின்பேரிலேயே ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் இன்று சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது.
மொத்தம் 16 இடங்களில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது. ரெய்டு நடைபெறும்போது சிதம்பரம் சென்னையில் இல்லை என்று கூறப்படுகிறது.
ரெய்டு குறித்து சிதம்பரம் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கை இதுதான்: வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியம் பல நூறு அனுமதிகளை வழங்கியுள்ளது.

என்மீது புகார் இல்லை
இந்த அமைப்பில் ஐந்து செயலாளர்கள் உள்ளனர். அவர்கள்தான் அனைத்துக்கும் பொறுப்பாளர்கள். அவர்கள் மீதோ, நிதி அமைச்சராக இருந்த என்மீதோ குற்றச்சாட்டு இல்லை.

பரிந்துரை அவர்களுடையது
மத்திய அரசின் இந்த ஐந்து செயலாளர்கள் வழங்கிய பரிந்துரைகள் படிதான், சட்டத்திற்கு உட்பட்டு, முதலீடுகளுக்கு அனுமதியும், அனுமதி மறுப்பும் செய்யப்பட்டது.

நோக்கம் வேறு
ஆனால், தற்போதைய அரசு, சிபிஐ மற்றும் பிற ஏஜென்சிகளை பயன்படுத்தி எனது மகன் மற்றும் அவரது நண்பர்களை குறிவைத்து செயல்படுகிறது. அரசின் நோக்கம் என்னை அமைதிப்படுத்த வேண்டும் என்பதுதான்.

நான் செய்வேன்
நான் எழுதுவதை தடுக்க வேண்டும் என்பதுதான். எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், கட்டுரையாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், குடிமை சமூக அமைப்புகள் ஆகியவற்றை அடக்கி ஒடுக்கும் அதே நடைமுறையை என்னிடமும் அரசு கையாளுகிறது. நான் சொல்ல விரும்புவதெல்லாம், நான் தொடர்ந்து பேசுவேன், எழுதுவேன். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications