பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேர் சஸ்பென்ட்: கதிராமங்கலம், நெடுவாசலுக்கு போராடியதால் நடவடிக்கை?
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேர் 15 நாட்களுக்கு சஸ்பென்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் 15 நாள்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 68 பேரை கல்லூரி நிர்வாகம் இன்று திடீரென 15 நாள்களுக்கு சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டது. இவர்கள் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டதால் சஸ்பென்ட் செய்ததாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால் மாணவர்களோ தாங்கள் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.
அண்மையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீதும் மாணவர்கள் தாக்குதல் நடத்தி இருந்தனர். அப்போது முதல்வரின் மண்டை உடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications