உயிர் கருகும் வேதனையில் ஒவ்வொரு விவசாயியும்.. மழையே.. நீயுமா??
திருச்சி: வறட்சியோ அல்லது தண்ணீர் இல்லாமலோ பயிர்கள் கருகுவது ஒரு பக்கம் என்றால் இப்போது மழை வந்து விவசாயிகளை வேதனையில் மூழ்கடித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் மழையில் 30க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் தமிழகத்தையொட்டியுள்ள பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்த நிலையில் நேற்று மழை பெய்யவில்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இரவு முதல் இன்று காலை வரை லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக உய்யக்கொண்டான் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட வேங்கூர், குவளக்குடி, கீழமுல்லக்குடி, ஒட்டக்குடி உள்ளிட்ட பகுதி வயல்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் 30 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக ஜெயங்கொண்டத்தில் 32 மி.மீ. மழை பெய்துள்ளது. அரியலூரில் 7 மி.மீ., திருமானூரில் 15 மி.மீ., செந்துறையில் 21 மி.மீ. மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 22 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் தோகைமலையில் 21 மி.மீ. பாலவிடுதியில் 12.3மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் 66.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆதனக்கோட்டையில் 26 மி.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.
நாளை 7-ந்தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றன. அதன்படி திருச்சி மாவட்டத்தில் 154 இடங்கள் அபாய இடங்களாக கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளாக 76 இடங்கள் கண்டறியப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை பணிகள் துரிதமாக நடப்பதாக கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications