பிரதமரை சந்திக்க முதல்வர் பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம்
பிரதமர் மோடியை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று டெல்லியில் சந்திக்கிறார்
சென்னை : பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லி செல்ல உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் வர்தா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்க வேண்டும், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்பு வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முதல்வர் பன்னீர் செல்வம் வலியுறுத்த உள்ளார்.
முன்னதாக புயல் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ.500 கோடியை நிதியை ஒதுக்கி, விரைந்து பணிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.