3-ஆவது நாளாக பதற்றம் நீடிக்கிறது... தூத்துக்குடிக்கு துணை ராணுவம் விரைகிறது
தூத்துக்குடியில் 3-ஆவது நாளாக பதற்றம் நீடிக்கிறது. போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாததால் துணை ராணுவத்தை அனுப்புமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கட்டுப்படுத்த போலீஸார் திணறுவதால் துணை ராணுவத்தை அனுப்புமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 100-ஆவது நாளை எட்டியது. இதையொட்டி தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷிடம் மனு கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.
அவர்கள் வழியிலேயே மடத்துக்குளம் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். எனினும் போலீஸாரையும் மீறி கட்டுக்கடங்காத கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றது. அப்போது அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

தடியடி
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸார் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தினர். இதை எதிர்கொள்ள முடியாமல் போலீஸ் குழுவினர் தப்பி ஓடினர். இந்நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த மக்கள் மீது மீண்டும் தடியடி நடத்தப்பட்டது.

13 பேர் பலி
மீண்டும் கோபமடைந்த மக்கள் அலுவலகத்தை சூறையாடினர். அப்போது போலீஸார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

போராட்டம்
ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி மகேந்திரன் ஆகியோர் பதவி விலகினால்தான் உட்ல்களை வாங்குவோம் என்று மருத்துவமனையில் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த ஆட்சியரை உள்ளே விடாமல் பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். போலீஸார் துணையுடன் அவர் தப்பி ஓடினார்.

கட்டுப்படுத்த
இதையடுத்து மீண்டும் தடியடி, துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்நிலையில் இன்றஉ மூன்றாவது நாளாக பதற்றம் நீடிக்கிறது. தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் திணறுகின்றனர்.

விரைகிறது துணை ராணுவம்
எனவே துணை ராணுவத்தை அனுப்புமாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டார். இதன்படி துணை ராணுவப் படையினர் விரைவில் தூத்துக்குடிக்கு வருகை தருகின்றனர் என தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications