காரைக்குடி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்க் கழகக் கூட்டம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்க் கழகக் கூட்டம் நேற்று (15.10.2016) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர்க் கழகத் தலைவர் சகாய அமலன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் முதல் பருவத்தில் மாணவர்களின் கற்றல் திறன், வகுப்பறையில் மாணவர்களின் செயல்பாடு, மாணவர்களின் வருகை, கையெழுத்துத் திறன் பற்றி ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் கற்றலில் பின்னடைவுள்ள மாணவர்களை, கற்றலை மேம்படுத்தும் வழிகளைக் கூறி பெற்றோருடன் கலந்து ஆலோசித்தனர். மேலும் மாணவர்களின் படைப்புகள் பெற்றோர்கள் அறியும் பொருட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் இரண்டாம் பருவத்திற்கான பள்ளி வளர்ச்சித் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை எஸ். விஜயலட்சுமி மற்றும் மு. கோமதி செய்திருந்தார்கள்.













Click it and Unblock the Notifications