காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்க் கழகக் கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சனிக்கிழமையன்று அனைத்து வகுப்புகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.
இப்பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு, தலைமையாசிரியர் திரு. ஆ. பீட்டர் ராஜா அவர்கள் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் மாணவர்களின் கல்வித்தரம், பள்ளியின் வளர்ச்சி, செயல்படுத்தக்கூடிய புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பெற்றோர்களுடன் உரையாடல்
கற்றலில் குறைவாக உள்ள மாணவர்களை,முன்னேற்றம் அடைய செய்வது குறித்து பெற்றோர்களிடம் கலந்துரையாடப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் டெங்கு பற்றிய விழிப்புணர்வும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.

ஸ்மார்ட் போர்ட்
இக்கூட்டத்தில் மாணவர்களின் படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டது. மாணவர்களின் வகுப்பறை செயல்பாடுகள் smart board மூலம் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

முகை இதழ் வெளியீடு
மாணவர்களின் படைப்புகளை தொகுத்து, ஏழாம் வகுப்பு மாணவர்கள் ‘முகை' என்ற இதழை வெளியிட்டனர். ஒவ்வொரு வகுப்புகளிலும், படிப்பில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற மாணவர்களுக்கு BADGE அணிவிக்கப்பட்டது.

பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் நன்றி
நிகழ்ச்சியின் இறுதியில் பட்டதாரி ஆசிரியர் திருமதி. கீதா சுந்தரேஸ்வரி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பபாடுகளை பட்டதாரிஆசிரியர் திருமதி. கோமதி அவர்கள் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications