பெட்ரோல்,டீசல் விலை உயர்வு:முதல்வரா இருந்தப்போ மக்கள் படும் துயரம் புரிஞ்ச மோடிக்கு இப்போ புரியலையா?
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
Recommended Video

சென்னை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக தினசரி அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை நிர்ணயித்து வருகின்றன.
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 4 வாரங்களாக ஏறுமுகமாக உள்ளது. இதன்காரணமாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று உயர்த்தப்பட்டது.

டீசல் விலை
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. இதேபோன்று ஒரு லிட்டர் டீசல் விலையானது 28 காசு உயர்ந்து ரூ.71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையானது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு
இந்நிலையில், இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து உள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசு உயர்த்தப்பட்டு ரூ.79.47 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலையானது 27 காசு உயர்ந்து ரூ.71.59 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
இதே நிலை நீடித்தால் பெட்ரோல் விலை நாளை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெரும் சவாலாக உள்ளது
சம்பாதிக்கும் பணமெல்லாம் பெட்ரோல் டீசலுக்கே செலவாகுவதாகும். இதனால் குடும்பத்தை நடத்துவது நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும் சவாலாக உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை
இதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு மானாவாரியாக உயரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
|
அப்போ ஒரு டிவிட்
இதனிடையே பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பதிவிட்ட டிவிட் தற்போது வைரலாகியுள்ளது. அதாவது பெட்ரோல் டீசல் மீதான மிகப்பெரிய விலை உயர்வு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு உதாரணம் என பதிவிட்டுள்ளார்.

மக்களை மறந்துவிட்டாரா?
மோடியின் அந்த டிவிட் தற்போது வைரலாகி வருகிறது. குஜராத் முதல்வராக இருந்தபோது மக்கள் படும் கஷ்டம் புரிந்த மோடிக்கு தற்போது புரியவில்லையா? மக்களை மறந்துவிட்டாரா என மக்கள் சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications