குமரி காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பு விலை அதிக அளவு குறைந்துள்ளது.
கன்னியாகுமரி : நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி சுற்றுப்பகுதிகளில் உள்ள காய்கறிச் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கார்த்திகை, மார்கழிக்கு பிறகு காய்கறி விலை உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வந்தது. குமரி மாவட்டத்தில் தற்போது காய்கறி விலை கட்டுக்குள் உள்ளது.

தற்போது கேரட் கிலோ ரூ.20, பூசனிக்காய் ரூ.24, தடியங்காய் ரூ.46, கோவக்காய் ரூ.40, பாகற்காய் ரூ.30 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்துள்ளது.
கிலோ ரூ.5க்கு தற்போது நாட்டு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பெங்களூரு தக்காளி கிலோ ரூ.18க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், குமரி சந்தைக்கு திசையன்விளை, காவல்கிணறு போன்ற பகுதிகளில் இருந்து நாட்டு தக்காளி வருகிறது. தற்போது தக்காளி உற்பத்தி அதிகரித்து வரத்தும் அதிகமாக இருப்பதால் விலை சரிவடைந்துள்ளது.
அதே நேரத்தில் நாட்டு தக்காளியை விட பெங்களூரு தக்காளி கூடுதல் நாட்கள் கெடாமல் இருப்பதால் பொது மக்கள் அதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதுவும் நாட்டு தக்காளி விலை சரிவுக்கு முக்கிய காரணம் என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications