விஜயகாந்த் ஆபிசுக்கே மீண்டும் நேரில் போய் ம.ந.கூ தலைவர்கள் ஆலோசனை
சென்னை: தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது கட்சி அலுவலகத்தில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி, மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.
விஜயகாந்த் கட்சிக்கு 124 தொகுதிகளும், மக்கள் நல கூட்டணிக்கு 110 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.

இதனிடையே, விஜயகாந்த்தை, அவரது கோயம்பேடு அலுவலகத்தில் வைத்து, மக்கள் நல கூட்டணியிலுள்ள தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

விவசாயிகள் பிரச்சினை, தேர்தல் பிரச்சாரம், எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது போன்ற விஷயங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

கூட்டணி உடன்பாடு ஏற்பட்டபோதும், தேமுதிக அலுவலகத்திற்குத்தான் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் சென்றிருந்தனர். இன்றைய ஆலோசனையின்போதும், ம.ந.கூ தலைவர்கள்தான் விஜயகாந்த்தை தேடி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு முறையும் கிங்கை சந்திக்க கிங் மேக்கர்கள் தான் தேமுதிக அலுவலகத்துக்கு சென்று கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications