2 தினங்கள் காத்திருந்தால் மக்களின் தீர்ப்பு என்னவென்று தெரியும்- ஜெயலலிதா
சென்னை: இன்னும் இரண்டு தினங்கள் காத்திருந்தால் மக்களின் தீர்ப்பு என்னவென்று தெரியும் என்று முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்வர் வேட்பாளர்களும், முக்கிய பிரமுகர்களும் காலை முதலே தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிக்கு சசிகலா உடன் வந்த முதல்வர் ஜெயலலிதா காலை 10 மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குச்சாவடிக்குள் ஜெயலலிதா நுழைந்த உடன் தேர்தல் அலுவலர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை கொடுத்தனர். நின்று கொண்டே மை வைத்தார் தேர்தல் அலுவலர்.
வாக்களித்த பின்னர் மெதுவாக நடந்து வந்த முதல்வரை அனைவரும் போட்டோ, வீடியோவிற்கு போஸ் கொடுக்குமாறு கூறினர். சிரித்தவாறே போஸ் கொடுத்த ஜெயலலிதா, போதுமா என்று கேட்டார்.
வாக்களித்து விட்டு வெளியே பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா "2 நாட்கள் காத்திருந்தால் மக்களுடைய தீர்ப்பு என்னவென்று தெரியும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications