இரோம் ஷர்மிளாவினால் கொடைக்கானல் போராட்டகளமாகிவிடும்- திருமணத்திற்கு எதிர்ப்பவர் விளக்கம்
பெண் போராளி இரோம் ஷர்மிளாவின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
கொடைக்கானல் : இரோம் சர்மிளா கொடைக்கானலில் தங்கினால் சுற்றுலா நகரான கொடைக்கானல் போராட்ட களமாக மாறிவிடும் என்று அவரது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மகேந்திரன் என்பவர் கூறியுள்ளார்.
இரோம் ஷர்மிளா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சார்பதிவாளரிடம் மனு அளித்த மகேந்திரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது இவ்வாறு கூறியுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக பட்டினி போராட்டம் நடத்தியவர் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா. கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னுடைய போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஷர்மிளா, பின்னர் தனிக்கட்சித் தொடங்கி மாநில சட்டசபை தேர்தலில் முதல்வரை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் அவருக்கு 90 வாக்குகளே கிடைத்தது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ஷர்மிளா கொடைக்கானலில் தங்கப் போவதாகக் கூறினார்.
தனது காதலரான லண்டனைச் சேர்ந்த தேஸ்மன் கொட்டின்கோவை திருமணம் செய்ய ஷர்மிளா முடிவு செய்தார். இருவரும் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் இதற்காக விண்ணப்பம் அளித்தனர்.
இரோம் சர்மிளா திருமணத்துக்கு பிறகு கொடைக்கானலில் தங்கி அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக போராடப் போவதாகக் கூறி இருந்தார். இதனால் இவர்கள் திருமணத்துக்கு அனுமதிக்க கூடாது என்று கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து சார்பதிவாளர் ராஜேசிடம் மனு அளித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட அவர் இதற்கான ஆதாரங்களை தெரிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி சார்பதிவாளர் ராஜேஸ் முன் மகேந்திரன் ஆஜராகி விளக்கமளித்தார்.
இரோம் சர்மிளா அவரது காதலரை திருமணம் செய்து இங்கேயே தங்கினால் சுற்றுலா நகரான கொடைக்கானல் போராட்ட களமாக மாறிவிடும் என கூறினார். அதற்கான ஆதாரங்களையும் சார்பதிவாளரிடம் அளித்தார். இதனை பெற்றுக் கொண்ட சார் பதிவாளர் மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதி ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications