பாதுகாப்பு கோரி நாசகார ஸ்டெர்லைட் நிர்வாகம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு
ஆலைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளது.
தூத்துக்குடி : போராட்டங்கள் வலுத்துவருவதால், ஆலைக்கு பாதுகாப்பு கேட்டு ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு எதிரான அப்பகுதியைச் சேர்ந்த அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டம் 53வது நாளை எட்டியுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதுவரை தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர் போராட்டம் தற்போது முற்றுகைப் போராட்டமாக மாறியுள்ளது. இதனால் ஆலை மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில், தங்களது ஆலைக்கு எதிரான தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆலைக்கு வரும் வாகனங்களை போராட்டக்காரர்கள் தொடர்ந்து தடுத்து வருவதாகவும், வரும்காலங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் ஆலைக்கு பாதுகாப்பு அவசியம் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications