பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: திருப்பூருக்கு 3-வது இடம்.. தேர்ச்சி விகிதம் 96.1% என அறிவிப்பு
பிளஸ் 2 தேர்வு முடிவில் திருப்பூர் மாவட்டத்துக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் பிளஸ் 2 தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் 97 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் 96.18 சதவீதம் தேர்ச்சி பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
3-வது இடத்தில் திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தேர்ச்சி விகிதம் 96.1 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் 94.75 சதவீதமும், பெண்கள் 96.36 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.13 சதவீதம் அதிகம் என்கிறார்கள்.
தூத்துக்குடிக்கு 7-வது இடம்
தூத்துக்குடி மாவட்டம் பன்னிரென்டாம் வகுப்பு தேர்வில் 95.52 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 7ம் இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் கூறியபோது, மாணவர்கள் 2279 பேர் தேர்வு எழுதி 2102 தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் மாணவியர்கள் 5313 தேர்வு எழுதி 5214 தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறினார். மொத்தம் 20,923 பேர் தேர்வு எழுதியதில் 19,985 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவித்த அவர், கடந்த ஆண்டு 96.44 சதவீதம் 4வது இடம் பிடித்திருந்தது என்றார்.
பெரம்பலூர்-94.10%
பெரம்பலூர் மாவட்டத்தில் 70 பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 342 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.19 சதவீதமும் மாணவர்கள் 92.97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 94.10 என்றும், இது கடந்த ஆண்டை விட 0.56 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
28-வது இடத்தில் கடலூர்
தமிழகத்தில் கடலூர் 28-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இது 32-வது இடத்தில் இருந்���து. இதன் தேர்ச்சி விகிதம் 86.69 ஆகும். 231 மாணவர்கள் 1180 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். 1151 முதல் 1180 வரை மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 4847 ஆகும், 1126 முதல் 1150 வரை மதிப்பெண் பெற்றவர்கள் 8510 மாணவர்களும், 1101 முதல் 1125 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் 11,739 மாணவர்களும் ஆவர்.
திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர்
திருவாரூர் மாவட்டத்தில் 85.40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த இந்த மாவட்டம் 24-ம் இடத்தை பிடித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 92.97 சதவீதமும், மாணவிகள் 95.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 94.10 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.56 சதவீதம அதிகம் எனப்படுகிறது. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 88.53 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.