விஜயகாந்த்தைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய மாரியப்பன் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கண்டித்து போஸ்டர் ஒட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நேற்று ரோந்து சென்றார்.
அப்போது அனுமதியில்லாமல் சுவர் ஒன்றில் தாது மணல் பிரச்சனையில் கண்டன குரல் எழுப்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கண்டிக்கும் வகையிலான போஸ்டரை ஒருவர் ஒட்டிக்கொண்டிருந்தார்.
இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் அவரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் நெல்லை டவுணை சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து நெல்லை ஜங்ஷன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications