அமைச்சர் 'தோப்பு' குறித்து அவதூறு: பிரேமலதா மீது வழக்குப் பதிவு
திருப்பூர்: அமைச்சர் பற்றி அவதூறாக பேசிய விஜகாந்த் மனைவி பிரேமலதா மீது கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜ கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவுக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் தினேஷ்குமார் போட்டியிடுகிறார். கடந்த 14ம்தேதி நடந்த தேர்தல் கூட்டத்தில் தினேஷ்குமாரை ஆதரித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா உரையாற்றினார்.

அப்போது அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தை பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதேபோல கட்சியின் உள்ளூர் பிரமுகர் கிட்டுசாமி என்பவரும் அமைச்சரை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
இவ்விருவர் மீதும், கோபிச்செட்டிப்பாளையம் நகர அதிமுக செயலாளர் சையது புடான்சா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து கோபி போலீசார் பிரேமதலா விஜயகாந்த் மற்றும் கிட்டுசாமிக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications