காவிரி போராட்டத்தால் இடையூறு.. ஸ்டாலின் மீது பாய்ந்தது வழக்குகள்
Recommended Video
சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற காவிரி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது பல பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று திமுக சார்பில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணா சாலையில் பெரும் பேரணி நடைபெற்றதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
எனவே, ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள் மீது தடையை மீறி சென்னை அண்ணாசாலை, மற்றும் மெரினாவில் மறியல் செய்தது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சென்னை திருவெல்லிக்ணேி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் பேர் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.