குண்டுவெடிப்பு எதிரொலி – சென்னையில் விடிய விடிய வாகன சோதனை
சென்னை: சென்னையின் முக்கிய இடங்களில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பையடுத்து சென்னையின் முக்கிய இடங்களில் விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. இதற்காக, சென்னை முழுவதும் 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள், அசோக்நகர், மவுண்ட் ரோடு, எக்மோர், அடையார், திருவான்மியூர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தினர். சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில், பயணிப்பவர்களின் உடமைகள் முழுவதும் சோதிக்கப்பட்ட பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், காவல் துறையினர் சி.சி.டி.வி கேமரா மூலமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மண்ணடி, திருவல்லிக்கேணி, எம்.ஜி.ஆர். நகர், உள்ளிட்ட இடங்களில் ரோந்துப் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல் துறையினருடன் தமிழ்நாடு ஊர்க்காவல் படை போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications