தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம்... போலீஸ் மீண்டும் தடியடி
தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

12 பேரை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு
போலீஸாரை முண்டியடித்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் பலியாகிவிட்டனர்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள்
இந்நிலையில் இறந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆட்சியர் மற்றும் எஸ்பி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்று போராட்டம் நடைபெற்றது.

போராட்டம்
அதுபோல் பிரேத பரிசோதனை அறை முன்பும் போராட்டம் நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கலைந்து போக உத்தரவிட்ட போலீஸ்
144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் உறவினர்கள் ஓரிருவரை தவிர மற்றவர்கள் கலைந்து செல்லுமாறு போலீஸார் கூறியும் கேட்காததால் மக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் அரசு மருத்துவமனைக்கு தூத்துக்குடி ஆட்சியர் வருவதாலும் தடியடி நடத்தப்பட்டது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications