"பங்கு பாண்டியன்" வீட்டில் நள்ளிரவில் திடீர் ரெய்டு.. கள்ள நோட்டா என்று பரபரத்த அதிமுகவினர்
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுக நிர்வாகி வீட்டில் சோதனை நடந்தது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இழுப்பையூரணி மறவர் காலனியை சேர்ந்தவர் பங்குபாண்டியன். இழுப்பையூரணி ஊராட்சி அதி்முக செயலாளராக உள்ளார். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பங்கு பாண்டியன் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் 1 மணி அளவில் கோவிலபட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இருதயராஜ், தனிப்பிரிவு ஏட்டு வைரமுத்து மற்றும் போலீசார் இவரது வீட்டுக்கு சென்று கள்ள நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், இதனால் வீடடை சோதனையிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பங்கு பாண்டியன் தன்னுடைய வீட்டில் கள்ள நோட்டுகள் இல்லை என்றும், சந்தேகம் இருந்தால் காலையில் வந்து சோதனையிடுமாறும் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் இதை ஏற்று கொள்ளாததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இன்ஸபெக்டர் பவுல்ராஜ் உள்ளிட்ட போலீசார வீட்டுக்குள் சென்று அலமாரி, பீரோ மறறும் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடததினர்.
இதில் கள்ள நோட்டுகள் எதுவும் சிக்கவில்லை. அதிமுக நிர்வாகி வீட்டில் களள நோட்டுகள் இருப்பதாக நள்ளிரவில் போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அஙகு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பங்கு பாண்டியன் கூறுகையில், நள்ளிரவில் போலீசார் அத்துமீறி வீட்டில் நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து எஸ்பியிடம் புகார் தெரிவிப்பேன் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications