ஏன் இந்த தடியடி, பலப்பிரயோகம்?.. ஸ்டாலின், நல்லகண்ணு உள்ளிட்ட தலைவர்கள் ஆவேசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தடியடிக்கு திமுக துணை தலைவர் ஸ்டாலின், இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், காவல்துறை மூலம் பிரச்சினையை தீர்க்க நினைப்பது கண்டனத்திற்குறியது. முதல்வர் ஓபிஎஸ் இளைஞர்களை நேரில் சந்தித்து விளக்கம் தெரிவிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்தை அதிமுக அரசு முறையாக கையாளவில்லை. அரசியல் ஆதாயம் தேட முயன்றதே போராட்டங்களுக்கு காரணம் என்றார்.
இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுவும் தடியடிக்கு கண்டனம் தெரிவித்தார்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தடியடியை கண்டித்துள்ளது.
Is this the way you treat your fellow beings. Shame on you police. #jallikattu please know that we protest also for you n your family pic.twitter.com/MU76bMnFgu
— Eswar Rajan Subraman (@erajan1989) January 23, 2017












Click it and Unblock the Notifications