ஜெ. வழக்கில் கர்நாடக அரசு சட்டப்படியே முடிவு எடுக்கும்: சொல்வது காங். கட்சியின் மிலிந்த் தியோரா
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா அரசு சட்டப்படியே முடிவெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரா கூறியுள்ளார்.
மத்தியில் பாரதிய அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் வகையில் ஒரு வார காலத்துக்கு 100 பிரஸ் மீட்டுகளை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 24 பிரஸ் மீட்டுகளை காங்கிரஸ் கட்சி நடத்தியது. சென்னையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய பாரதிய ஜனதா அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
கடந்த காலங்களில் காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்களை எதிர்த்த பா.ஜ.க, தற்போது அவற்றின் பெயர்களை மாற்றிக் கொண்டுள்ளது. கருப்பு பணத்தை மீட்போம் என்றார்கள்; அதை செய்யவில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என்றார்கள், அதையும் மேற்கொள்ளவில்லை. விலைவாசி உயர்ந்து விட்டது. விவசாயிகளின் நிலங்களை பறிக்க சட்டம் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் மட்டும் 300 விவசாயிகள் இறந்துள்ளனர். நரேந்திர மோடி உலக நாடுகளுக்கு செல்கிறார். படம் எடுத்துக்கொள்கிறார். இதைத் தவிர அவரது செயல்பாட்டில் எதுவும் இல்லை.
இவ்வாறு மிலிந்த் தியோரா கூறினார்.
பின்னர் அவரிடம், ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்துகின்றனவே, அவர்களிடம் இருந்து அந்த அரசுக்கு நிப்பந்தம் வருகிறதா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், இதில் கர்நாடக காங்கிரஸ் அரசை அரசியல் முடிவுகள், தீர்மானிக்க வைக்க முடியாது. சட்டப்படியான தகுதிகளின் அடிப்படையில்தான் கர்நாடக அரசு முடிவு எடுக்கும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications