மக்களை பணத்திற்கு அடிமையாக்கி அவமானப்படுத்திய திராவிட கட்சிகள்: பொன். ராதாகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil
குமரி: திராவிட கட்சிகள் தமிழக மக்களை பணத்திற்கு அடிமையாக்கி அவமானப்படுத்திவிட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இருப்பினும் மக்கள் குடை பிடித்துக் கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகிறார்கள்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திராவிட கட்சிகள் தமிழக மக்களை பணத்திற்கு அடிமையாக்கி அவமானப்படுத்திவிட்டன. அதிமுகவும், திமுகவும் பணப்பட்டுவாடா செய்துள்ளன. கண்டெய்னர், கண்டெய்னராக பணப் புழக்கம் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications