நான் கூறியதைதான் உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது- முதல்வர் நாராயணசாமி
நான் கூறியதைத்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறியது என்று முதல்வர் நாராயாணசாமி தெரிவித்தார்.
புதுவை: யாருக்கு அதிகாரம் என்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் பல முறை கூறியதுதான் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
டெல்லியில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை நாராயணசாமி வரவேற்றார். இதுகுறித்து நாராயணசாமி கூறுகையில் அந்த தீர்ப்பை நான் முழுவதுமாக படிக்கவில்லை. அந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை கூறுகிறேன்.

இந்த தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்துக்கு 100-க்கு 110 சதவீதம் பொருந்தும். நான் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் இந்த 2 ஆண்டு காலம் வரை, துணை நிலை ஆளுநர் அமைச்சர்களின் அறிவுரையின்படிதான் செயல்பட வேண்டும். அவருக்கென்று தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
அது மட்டுமல்லாது. 19 முறை அவருக்கு கடிதங்கள் எழுதினேன். அதிகாரிகளை அழைத்து தனியாக கூட்டம் போடுவதற்கு அதிகாரம் கிடையாது என்றும் கூறியுள்ளேன். பல பகுதிகளுக்கு சென்று பார்ப்பதற்கு உரிமை உண்டு. தனியாக உத்தரவு போடுவதற்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளேன்.
கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எல்லா விஷயங்களையும் டெல்லிக்கு அனுப்புவதற்கு அதிகாரம் இல்லை. முக்கியமாக கொள்கை முடிவுகளை எடுக்கும் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் டெல்லிக்கு அனுப்பலாம் என்று நான் சொல்லியிருக்கிறேன். நான் சொன்ன அனைத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். அமைச்சரவை முடிவே இறுதியானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அமைச்சரவை எடுக்கும் முடிவில் தலையிட ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை.
மாநில நிர்வாகத்தில் அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உண்டு. நிதி, நிலம், நிர்வாகம் முழுவதிலும் மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications