சென்னையில் பொங்கல் புத்தகத் திருவிழா - ஜனவரி 13ம் தேதி தொடங்குகிறது
சென்னை: பொங்கல் புத்தகத் திருவிழா சென்னையில் வரும் ஜனவரி 13 அன்று துவங்கி ஜனவரி 24ஆம் தேதி வரை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனவரி 13 அன்று மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறும்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமை தாங்குகிறார். மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபால் கிருஷ்ண காந்தி தொடங்கி வைக்கிறார். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைவர் இரா.முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். புத்தகத் திருவிழாவில் சமீபத்திய "சென்னை வெள்ளம்" குறித்த புகைப்படக் கண்காட்சியும், தமிழகத்தில் உள்ள "புகழ்பெற்ற நூலகங்கள்" குறித்தக் கண்காட்சியும் இடம்பெறும்.

புத்தகத் திருவிழா குறித்த முழுமையான விவரங்களை இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட chennaibookfair.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதில் பங்கேற்கும் அரங்குகள் விவரம் எங்கு எந்த புத்தகம் கிடைக்கும் என்ற தேடல் வசதி, புத்தகத் திருவிழாவிற்கு வருகை தருவதற்கான வரைபடம், அரங்கின் வரைபடம் இடம்பெறும். வருகைதரும் வாசகர்கள் பரிசுபெற QR CODE ஸ்கேன் செய்து பதிவு செய்யும் முறையும் இருக்கும்.
அனைத்து புத்தகப் பதிப்பாளர்களும் தங்கள் அரங்கிலேயே புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதனால் திருவிழாவிற்குள் ஒரு தனி திருவிழா ஆங்காங்கே நடைபெறும்.
50 அரங்குகளுடன் கூடிய இந்த புத்தகத் திருவிழாவில் வாசகர்கள் வந்து பார்வையிட விசாலமான பாதைகள், நவீன தொழில்நுட்ப முறையிலான கழிப்றைகள், உணவு வளாகம், வயதானவர்கள் ஓய்வெடுக்க அங்காகே இருக்கை வசதிகள், மாற்றுத் திறனாளிகள் பார்வையிட விசேச வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நுழைவுக் கட்டணமாக 5 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தொகை முழுவதும் முதல்வர் வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று மேற்கண்ட விபரங்களை தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications