திருச்செந்தூர் கோயிலுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம்! ரூ 1 லட்சம் அபராதம் விதித்த நிர்வாகம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலுக்குள் பிறந்தநாள் கொண்டாடிய தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான சம்பவத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு கோவில் நிர்வாகம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதற்காக கோவில் தனித்தனியே அறைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 3 ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் காத்திருப்பு அறையில் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் நடத்திய விசாரணையில், ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தின் மேலாளரான நல்லூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடியது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தனியார் நிறுவனத்திற்கு கோவில் நிர்வாகம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முதல்கட்டமாக அவரிடம் விளக்கம் கேட்ட பிறகு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பக்தர்கள் யாரும் இல்லாத நேரத்தில் பிறந்தநாள் கொண்டாடியதாக ஐயப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதுடன் இதில் கலந்து கொண்டவர்களுக்கு தண்டனையாக 3.3.2026 அன்றைய தினத்திற்கு சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் நிர்வாகம் சார்பில் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications