ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்... ஸ்டாலின் திட்டவட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியளார்களை சந்தித்தார். அப்போது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் பன்வாரிலால் அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்தார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.

ஆளுநர் மன்னிப்பு
இதைத்தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளரிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கோரியுள்ளார். நல்ல கேள்வி கேட்டதால் பத்திரிக்கையாளரை தனது பேத்தியாக நினைத்து தான் கன்னத்தில் தட்டியதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

ஸ்டாலின் குற்றச்சாட்டு
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் ஆட்சியை போல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார்.

புரோகித் தகுதியற்றவர்
பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டியது தமிழகத்திற்கு பெரும் தலைக்குனிவு என்றும் ஸ்டாலின் சாடினார்.ஆளுநர் பொறுப்பில் இருக்க பன்வாரிலால் புரோகித் தகுதியற்றவர் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போராட்டம் தொடரும்
நாகரிகமற்ற நிலையில் பெண் நிருபர் கன்னத்தை ஆளுநர் தட்டியுள்ளார். எனவே ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications