புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி - எம்.எல்.ஏ ஜான்குமார் ராஜினாமா
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு எம்எல்ஏ ஜான்குமார், தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட ஏதுவாக, அவர் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தலின் பேரில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வராக பதவி ஏற்றார்.

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாத ஒருவர், முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதித்துவ பதவியை ஏற்றுக்கொண்டால் பதவியேற்ற 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது விதியாகும்.
அந்த வகையில், இன்னும் 3 மாதங்களில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் நாராயணசாமி. இவர் போட்டியிட ஏதுவாக நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அவர் இன்று காலையில் வழங்கினார். இதனை அடுத்து, நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சி மேலிடத்துடன் ஆலோசிக்க முதலமைச்சர் நாராயணசாமி டெல்லி விரைந்துள்ளார்.
முன்னதாக அவர், தனது பதவி விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். நாராயணசாமி அவர்கள் கட்சியை ஒருங்கிணைத்து சூறாவளி பிரச்சாரம் செய்து வெற்றி பெற்று முதல்வராக அமர்ந்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்டு நான் எம்.எல்.ஏ தொகுதியை விட்டுத்தரவில்லை. என்னுடைய விருப்பம் தெருக்கோடியில் உள்ள மக்களை முன்னுக்கு கொண்டுவருவதான்.
நான் விரைவில் நியமன எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் வருவேன் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஜான்குமார் கூறியுள்ளார். நாராயணசாமி மிகவும் சிறப்பான முறையில் பாண்டிச்சேரியை முன்னேற்றுவார் என்றும் கூறியுள்ளார். பாண்டிச்சேரிக்கு நல்லது நடக்கப் போகிறது என்றும் கூறியுள்ளார் ஜான்குமார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications