புதுச்சேரியில் 24 மணிநேரத்தில் 11 செ.மீ. மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 11.09 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. சென்னை வெள்ள நீரில் மிதக்கிறது. கடலூர் மாவட்டம் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 11.09 செ.மீ. மழை பெய்துள்ளது. மழையையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழையால் புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து கணக்கிடுமாறு முதல்வர் ரங்கசாமி விவசாயத் துறை இயக்குனரகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை 9 மணியில் இருந்து மழை நின்றிருந்தாலும், வானம் மேகமூட்டமாக உள்ளது.