For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்டாவில் கலவரத்தை கட்டுப்படுத்தும் ஆர்ஏஎப் படை பிரிவு துணை ராணுவம்.. வாபஸ் பெறப்பட்டது!

டெல்டா மாவட்டங்களில் கலவரத்தை கட்டுப்படுத்தும் அதிரடி படை பிரிவு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்டாவில் உள்ள 5 மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிப்பு- வீடியோ

    திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் கலவரத்தை கட்டுப்படுத்தும் அதிரடி படை பிரிவு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இவர்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளனர்.

    டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள பகுதிகளில் மக்கள் பல வருடங்களாக இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். தற்போது மக்கள் போராட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.

    RAF force arrived in Delta region of Tamilnadu

    இதனால் டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 80 சதவிகித ராணுவத்தினர் கோவை துணை ராணுவ படை பிரிவு 105ஐ சேர்ந்தவர்கள். இவர்கள அதிவிரைவு படை என்று அழைக்கப்படுவார்கள்.

    அதேபோல் இவர்களுடன் ஆர்ஏஎப் எனப்படும் துணை ராணுவ படையின் இன்னொரு பிரிவும் சேர்ந்துள்ளது. இவர்கள் கலவரத்தை கட்டுப்படுத்தும் படை பிரிவு சேர்ந்தவர்கள். இந்த விதமான படைகள் மிகவும் மோசமான நேரத்தில், கலவரம் உண்டாக கூடிய சூழ்நிலையில் மட்டுமே களமிறங்கும்.

    டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடந்தாலும், அம்மக்கள் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் துணை ராணுவ படை வந்தது ஏன், அதுவும் கலவரத்தை கட்டுப்படுத்தும் படை பிரிவு வந்தது ஏன் என்று கேள்வி உருவாகி இருக்கிறது.

    நேற்று இரவும் இவர்கள ஆயுதங்களுடன் சிறிய 'டிரில்' பயிற்சி எடுத்து இருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் இன்னும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனை பெரிதானத்தை அடுத்து தற்போது இவர்கள் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறார்கள். படை குவிக்கப்பட்டது, வாபஸ் பெறப்பட்டது எதற்கும் இப்போதுவரை காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    English summary
    Para Military force arrived in Delta region of Tamilnadu to control people protest against Methane project.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X