டெல்டாவில் கலவரத்தை கட்டுப்படுத்தும் ஆர்ஏஎப் படை பிரிவு துணை ராணுவம்.. வாபஸ் பெறப்பட்டது!
டெல்டா மாவட்டங்களில் கலவரத்தை கட்டுப்படுத்தும் அதிரடி படை பிரிவு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Recommended Video

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் கலவரத்தை கட்டுப்படுத்தும் அதிரடி படை பிரிவு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இவர்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள பகுதிகளில் மக்கள் பல வருடங்களாக இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். தற்போது மக்கள் போராட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 80 சதவிகித ராணுவத்தினர் கோவை துணை ராணுவ படை பிரிவு 105ஐ சேர்ந்தவர்கள். இவர்கள அதிவிரைவு படை என்று அழைக்கப்படுவார்கள்.
அதேபோல் இவர்களுடன் ஆர்ஏஎப் எனப்படும் துணை ராணுவ படையின் இன்னொரு பிரிவும் சேர்ந்துள்ளது. இவர்கள் கலவரத்தை கட்டுப்படுத்தும் படை பிரிவு சேர்ந்தவர்கள். இந்த விதமான படைகள் மிகவும் மோசமான நேரத்தில், கலவரம் உண்டாக கூடிய சூழ்நிலையில் மட்டுமே களமிறங்கும்.
டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடந்தாலும், அம்மக்கள் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் துணை ராணுவ படை வந்தது ஏன், அதுவும் கலவரத்தை கட்டுப்படுத்தும் படை பிரிவு வந்தது ஏன் என்று கேள்வி உருவாகி இருக்கிறது.
நேற்று இரவும் இவர்கள ஆயுதங்களுடன் சிறிய 'டிரில்' பயிற்சி எடுத்து இருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் இன்னும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனை பெரிதானத்தை அடுத்து தற்போது இவர்கள் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறார்கள். படை குவிக்கப்பட்டது, வாபஸ் பெறப்பட்டது எதற்கும் இப்போதுவரை காரணம் தெரிவிக்கப்படவில்லை.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications