சென்னையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ராகுல்காந்தி திடீர் ஆலோசனை!
சென்னையில் ஹோட்டலில் தங்கியுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியுடன் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: கிண்டி ஹோட்டலில் தங்கியுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை அக்கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்தனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் கலந்த கொள்வதற்காக சென்னை வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சென்னை கிண்டியில் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். அவரை 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை சந்தித்தனர்,

விஜயதாரணி, வசந்த் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளார். இதேபோல் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி அமைச்சர்களும் ராகுல்காந்தியை தனித்தனியாக் சந்தித்து வருகின்றனர்.
இதில் தமிழக புதுச்சேரி அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறுது. மேலும் புதுச்சேரி ஆளுநருடனான மோதல் குறித்தும் விவாதித்து வருவதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications