தொடரும் கனமழை... கடலுக்குச் செல்லாமல் கடற்கரையில் அணிவகுக்கும் படகுகள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தியுள்ளனர்.
வங்க கடலில் குமரி அருகே ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இரவிலும் லேசான சாரலுடன் தொடங்கிய மழை போக போக காற்றுடன் கனமழையாக கொட்டியது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த கனமழை காரணமாக குருஸ் பார்னபாந்து சிலை அருகே பழமையான வட்ட தெப்பத்தில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல பேரி கார்டு அமைத்தனர். கடலில் பலத்த சூறை காற்றும், ஆக்ரோஷமாக அலையும் வீசுவதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடந்து வரும் உப்பள வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் தீப்பெட்டி தொழிலும் முடங்கியது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து பரவலான மழை பெய்து வருகிறது.
பல்வேறு இடங்களில் பெய்த மழையின் அளவு பின்வருமாறு :-
கோவில்பட்டி 7 மிமீ, ஓட்டப்பிராடம் 16 மிமீ, சாத்தான்குளம் 61.4மிமீ, ஸ்ரீவைகுண்டம் 32.2 மிமீ, தூத்துக்குடி 83.4 மிமீ, திருச்செந்தூர் 97 மிமீ, விளாத்திகுலம் 40 மிமீ, கயத்தாறு 5 மிமீ, காயல்பட்டிணம் 150.3 மிமீ, குலசை 78 மிமீ, கீழ அரசடி 25.2 மிமீ, எட்டயபுரம் 1 மிமீ, கடம்பூர் 10 மிமீ, மணியாச்சி 10 மிமீ, வேடநத்தம் 90 மிமீ, சூரங்குடி 68 மிமீ, காடல்குடி 57 மிமீ, வைப்பாறு 50 மிமீ, கழுகுமலை 15 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிக பட்சமாக காயல்பட்டிணத்தில் 150.3 மிமீயும், குறைந்துபட்சமாக எட்டயபுரத்தில் 1 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications