மழை வந்து மயிலாடுதுறை வாடுதே! இரவு பகலாக வெளுத்து வாங்கும் கனமழை! மூழ்கிய பயிரால் விவசாயிகள் வேதனை!
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியதால் சம்பா பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கிய நிலையில், இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவ மழை தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் ,ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயல்களில் சூழ்ந்திருந்த தண்ணீர்
நேற்று மழைப்பொழிவு இல்லாத நிலையில் பல்வேறு பகுதிகளில் வயல்களில் சூழ்ந்திருந்த தண்ணீர் வடிய தொடங்கியிருந்தது இதனிடையே இன்று காலை மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக மயிலாடுதுறை, மணல்மேடு ,தரங்கம்பாடி, செம்பனார்கோவில், குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

நீரில் மூழ்கும் பயிர்கள்
குறிப்பாக பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி இருக்கக்கூடிய காட்சிகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாக நேற்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார் . தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

விவசாயிகள் வேதனை
இதனால் சம்பா பயிர்கள் அதிக அளவில் முழுவதுமாக நீரில் மூழ்கி சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆங்காங்கே உள்ள ஒரு சில வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாமல் விட்டதால் மழை நீர் செல்ல வழி இன்றி விளைநிலங்களுக்குள் தண்ணீர் சூழ்ந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து செருதியூர் ,நலத்துக்குடி, முளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கிறது.

களத்தில் இறங்கிய விவசாயிகள்
இதனை தொடர்ந்து விவசாயிகள் அங்குள்ள மஞ்சள் ஆறு மற்றும் குப்பன் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை தானாக முன்வந்து அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்த போதும் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்தந்த ஊர் விவசாயிகளே இணைந்து வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் அடைப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல வழிவகை செய்து வருகின்றனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications