தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை.. மழை பெய்யப் போகிறது.. வானிலை மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக லேசான குளிர் தொடங்கிவிட்ட நிலையில் மழை என்பது குறைவாகவே உள்ளது. வடக்கிழக்கு பருவ மழைதான் தமிழ்நாட்டிற்கு பலன் தரும். அந்த வகையில், இந்த ஆண்டு வடக்கு பருவ மழை அக்டோபர் 30ம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதே போன்று 30 தேதி மழை பெய்தது. ஆனால் அதற்கு பிறகு பெரிய அளவில் மழை ஒன்றும் பெய்யவில்லை.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications