கனமழையால் பக்கிங்காம் கால்வாய் நிரம்பியது.. மயிலாப்பூரில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
மயிலாப்பூரில் பக்கிங்காம் கால்வாய் நிரம்பி கழிவு நீருடன் மழை நீரும் புகுந்துள்ளதால் மக்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரத்தால் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. புறநகர் மட்டுமல்ல நகரின் மையப்பகுதியாக உள்ள மைலாப்பூரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.
காலையில் வெயிலடித்த நிலையில் பிற்பகல் 3 மணி முதல் மழை விடாமல் பெய்வதால் ராதாகிருஷ்ணன் சாலை அருகே சென்னை சிட்டி சென்டருக்கு பின்புறம் உள்ள பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வெள்ளம் செல்கிறது.

பக்கிங்காம் கால்வாயை ஓட்டியுள்ள ஏகாம்பரம் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீருடன் கழிவு நீரும் புகுந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு மழை வெள்ளம் தாக்கியது. அப்போதோ தூர்வாரியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பது மயிலாப்பூர்வாசிகளின் குற்றச்சாட்டாகும்.
நேரம் செல்லச் செல்ல வெள்ளம் உயர்ந்து கொண்டே வருவதால் பாதுகாப்பான இடத்திற்கு சென்றால் மட்டுமே அந்த பகுதிகள் தப்பிக்க முடியும்.
இதுவரை யாருமே வந்து பார்க்கவில்லை எந்த உதவியும் செய்யவில்லை என்பது ஏகாம்பரம் தெரு பகுதி மக்களின் குற்றச்சாட்டாகும். மின்சார பெட்டிகளை பராமரிக்கவில்லை என்றும் மின்வயர்கள் தண்ணீருக்கு மேலேயே உள்ளதால் மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

காரணீஸ்வரர் பக்கோடா தெருவில் வெள்ளம் முழங்கால் அளவிற்கு நிற்கிறது. கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
மயிலாப்பூர் சாலைகளில் வீடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் மழை நீரில் சிக்கி ஸ்தம்பித்து நிற்கின்றன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications