ஸ்டெர்லைட்: இந்த வெற்றி உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம்- ரஜினி
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள வெற்றி இந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்த மக்களுக்கு சமர்ப்பணம் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பூட்டி சீல் வைத்தார்.

இது 100 நாட்கள் போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
👍🏻🤘🏻 pic.twitter.com/ElseFT9eF8
— Rajinikanth (@rajinikanth) May 28, 2018
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது, உயிரிழந்த ஆத்மாக்களுக்கு வெற்றி சமர்ப்பணம். அப்பாவி மக்களின் ரத்தத்தை குடித்த இதுபோன்ற போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடரக் கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன் என்றார் ரஜினி.












Click it and Unblock the Notifications