போர் உறுதியா? நல்ல நேரம் பார்த்து புறப்பட்ட ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் நல்ல நேரம் பார்த்து புறப்பட்டிருப்பது எதிர்ப்பார்பை கூட்டியுள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நல்ல நேரம் பார்த்து வீட்லிருந்து புறப்பட்டிருப்பது எதிர்ப்பார்பை கூட்டியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். 31ஆம் தேதியான இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறியிருந்தார்.
இதனால் காலை முதலே அவரது வீடு அமைந்துள்ள போயஸ்கார்டன் மற்றும் ராகவேந்திரா மண்டபம் அமைந்துள்ள பகுதிகள் பெரும் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.
ரஜினியின் அறிவிப்பை தெரிந்துகொள்ள ரசிகர்களும் மீடியாக்காரர்களும் திரண்டுள்ளனர். வழக்கமாக கடந்த 5 நாட்களாக காலை 8 மணிக்கெ ரசிகர்களை சந்தித்து வந்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் இன்று காலை 7.45 முதல் 8.45 வரை நல்ல நேரம். நடிகர் ரஜினி நல்லநேரம் முடிவதற்குள் 8.40 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
ரஜினி நல்ல நேரத்திலேயே வீட்டில் இருந்து புறப்பட்டு வந்திருப்பது ரசிகர்களின் எதிர்ப்பார்பை அதிகரித்துள்ளது. போர் உறுதியா என்ற ஆர்வத்தையும் கூட்டியுள்ளது.