ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல்.. முதல் முறையாக களமிறங்கி போலீசில் புகார் கொடுத்த ரசிகர்கள்
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி உள்ளிட்டோர் மீது ரஜினி ரசிகர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
தந்தை பெரியார் 1971-ம் ஆண்டு சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு, ஊர்வலத்தை நடத்தினார். இந்த மாநாடு குறித்து அண்மையில் துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

ஆனால் ரஜினிகாந்த் உண்மைக்கு மாறாக பேசியதாகவும் இதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பெரியார் இயக்கத்தினர் வலியுறுத்தினர். தாம் பேசியது உண்மை; மன்னிப்பு கேட்கவே முடியாது என்றார் ரஜினிகாந்த்.
மேலும் ரஜினிகாந்துக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக முதல் முறையாக ரசிகர்கள் சென்னை சோழிங்கநல்லூர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், சென்னையில் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் நடத்தினர்.
அப்போது திராவிடர் விடுதலை கழக நிர்வாகி உமாபதி உள்ளிட்ட 15 பேர் ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினர். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கோவை, விழுப்புரத்தில் புகார்
இதேபோல் கோவை மற்றும் விழுப்புரத்திலும் திராவிடர் விடுதலை கழகத்தினருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications