For Daily Alerts
Just In
தாக்குதல் தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும்: எச்சரிக்கும் ராமதாஸ்
தாக்குதல் தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு-தலைவர்கள் கண்டனம்- வீடியோ
சென்னை: தாக்குதல் தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர்ல கொல்லப்பட்டனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், தாக்குதல் தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Comments
English summary
PMK founder Ramadoss condemns police fire today in Thootukudi. Ramadoss says if the shooting continues the Tamilnadu will be Agitate.
Story first published: Wednesday, May 23, 2018, 18:23 [IST]