கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்க வலியுறுத்தல்... மீனர்வர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம் : கச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

இதனால் அன்றாடம் மீன் பிடிக்கச் செல்லும் சுமார் 1,200 படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

fishing boat

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்சங்க நிர்வாகிகளின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கச்சத்தீவு உள்ளிட்ட பாக்நீரிணைப்பகுதியில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத்தர வேண்டும், இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தங்களின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றித் தர வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மீனவர்களின் வேலை நிறுத்தத்தினால் ராமேஸ்வரத்தில் நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+