என் ஃபோட்டோவை வெளியிடாதீங்க.. ஜெ. கேட்டுக் கொண்டதாக சொல்கிறது அப்பல்லோ
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா தன்னுடைய புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
சென்னை; எம்சிஏ விதிகளின்படி நோயாளிகளின் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்பதால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதாவின் புகைப்படம் வெளியிட வில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். 75 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து, ஒரு மாநிலத்தின் முதல்வரான ஜெயலலிதாவிற்கு 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார். அவரது மரண அறிக்கையை தமிழக அரசும் அப்பல்லோ நிர்வாகமும் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அதிமுகவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணை
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசும் அப்பல்லோ நிர்வாகமும் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெ. விருப்பப்படி…
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அளித்த மனுவில் மறைந்த ஜெயலலிதாவின் விருப்பப்படியே அவரது புகைப்படம் வெளியிடப்படவில்லை என்று கூறியுள்ளது. மேலும், எம்சிஏ விதிகளின் படி நோயாளிகளின் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீலிடப்பட்ட உரை
மறைந்த ஜெயலலிதாவிற்கு உரிய முறையில் நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ள அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் சீலிடப்பட்ட உரையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்த விவரங்களை அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அறிக்கை கேட்டால் மனு
ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டால், அதனை அளிக்காமல் மனு ஒன்றை அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வரும் 13ம் தேதிக்கு நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications