ரெட்டை இலை எங்களுக்குதான்.. உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு ஏன் பயப்படணும்.. ஜெயக்குமார் பதிலடி
உள்ளாட்சி தேர்தலைக் கண்டு பயப்படவில்லை என்று ஓபிஎஸ் அணி மைத்ரேயனுக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை தைரியமாக சந்திக்க தயாராக உள்ளதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் அணியில் உள்ள எம்பி மைத்ரேயன், முதல்வர் பழனிச்சாமி அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாரா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்.
இவருக்கு பதில் அளிக்கும் வகையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தலை கண்டு பயப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இரட்டை இலை எங்களுக்கே..
மேலும், தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாகத் தெரிவித்த ஜெயகுமார், 98 சதவீத நிர்வாகிகள் தங்களுடன் இருப்பதால் இரட்டை இலையை விரைவில் பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆதாயம்
மாநில உரிமையை நிலைநாட்டுவதற்காகவும், தமிழகத்திற்கு தேவையான நிதி பெறுவதற்காகவுமே முதல்வர் பிரதமரை சந்தித்தார் என்று ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக, பிரதமரை சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசுடன் இணக்கம்
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல்பட்டால்தான் வளர்ச்சியை பெற முடியும். மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதில் தவறு இல்லை என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நிபந்தனை இல்லாமல் வந்தால்…
முன்னால் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் அணி, நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேசுவோம். இல்லை என்றால் இணைப்பில் சிக்கல் நீடிக்கவே செய்யும் என்றும் அமைச்சர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications