பெங்களூரிலிருந்து வாணியம்பாடிக்கு காரில் சென்ற தொழிலதிபரிடம் ரூ.7.35 கோடி கொள்ளை
வேலூர்: மயக்க மருந்தை முகத்தில் தெளித்து வாணியம்பாடி அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.7.35 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் பதிவாகியுள்ளது.
பெங்களூரில் இருந்து வாணியம்பாடிக்கு காரில் முகமது அமீன் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் நேற்றிரவு பயணித்துள்ளார். கிருஷ்ணகிரி தாண்டி லட்சுமிபுரம் அருகே கார் சென்றபோது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள், காரை குறுக்கே நிறுத்திவிட்டு அமீனின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்துவிட்டு, முகமது அமீன் கொண்டு சென்ற ரூ.7.35 கோடி பணத்தை அபேஸ் செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், காரில் இருந்தும் அவரை கீழே தள்ளிவிட்டதாகவும் தெரிகிறது. மயக்கம் தெளிந்த பிறகு எழுந்த அமீன் ரூ.7.35 கோடி காணாதது குறித்து அதிர்ச்சியடைந்தார். அமீன் அளித்த புகாரின் பேரின் திருப்பத்தூர் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெகிறது.
கொள்ளை போன பணம், பெங்களூரில் நிலத்தை விற்று சம்பாதித்தது என்று அமீன் தெரிவித்துள்ளார். எனவே பெங்களூரிலிருந்தே மர்ம நபர்கள் காரில் பின்தொடர்ந்து வந்து கொள்ளையடித்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. காரில் இருந்து தள்ளிவிட்டதில் காயமுற்ற அமீன், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அமீன் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதால் வழக்கில் இன்னும் துப்பு கிடைக்கவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications