செளதியில் இருந்து ஈரானுக்குள் நுழைந்த 5 தமிழக மீனவர்கள் கைது- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாகர்கோவில்: செளதியில் இருந்து ஈரானுக்குள் திசைமாறி நுழைந்ததாக 5 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீனவர்களை ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் வளைகுடா நாடுகளுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கோடிமுனை பகுதியை சேர்ந்த ஜூடு, கன்னியாகுமரியை சேர்ந்த ஜில்டு, அழிக்காலை சகாய ஆன்றோ, ஆரோக்கிய சகாய பிரிட்டோ, சின்னவிளை எட்வின்ராஜ் ஆகிய 5 மீனவர்கள் செளதி அரேபியாவில் 2014-ம் ஆண்டு முதல் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

கடந்த மாதம் 25-ந் தேதி செளதியின் கப்தீப் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென திசைமாறி ஈரான் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளனர். எல்லை தாண்டி நுழைந்ததாக ஈரான் கடற்படையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த தகவலை மீனவர்கள் 5 பேரும் ஊரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவித்தனர். அவர்கள் இது குறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சிலிடம் தெரிவித்தனர்.
அவர் இன்று மீனவர்களின் குடும்பத்தாருடன் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட நிர்வாகத்திடமும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சர்ச்சில், இந்திய தூதரகம் மூலமே மீனவர்களை மீட்க முடியும். ஆகையால் இதை மத்திய அரசு உடனே மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications