சலசலப்பின்றி முடிந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்- மாலை 5 மணிவரை 74.5% வாக்குகள் பதிவு- live
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இன்னும் சிறிது நேரத்தில் வாக்குப் பதிவு தொடங்க உள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு அமைதியாக நிறைவடைந்துள்ளது. மாலை 5 மணிவரை 74.5% வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்தும் 80-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மக்கள் காத்திருப்பதால் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.
-ஆர்.கே.நகரில் மாலை 5 மணி 74.5% வாக்குகள் பதிவு
-ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவு
-ஆர்.கே.நகர் தொகுதி வாக்குப் பதிவு நேரம் முடிந்த பின்னரும் நீடிக்கும் கூட்டம்
-வாக்காளர்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்
-ஆர்.கே.நகரில் மாலை 4 மணிவரை 65% வாக்குகள் பதிவாகி இருந்தன
-இன்னும் சிறிது நேரத்தில் ஆர்.கே.நகரில் வாக்குப் பதிவு நிறைவு
-வாக்குப் பதிவு நிறவடையும் நிலையிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருப்பு
-ஆர்.கே.நகர்: 4 மணி நிலவரப்படி 65% வாக்குப் பதிவு
-184 வாக்குச் சாவடிகளில் மாலை 3 மணி வரை 57.16% வாக்குகள் பதிவு
-ஆர்.கே.நகரில் சுமூகமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது- பிரவீன் நாயர்
-ஆர்.கே.நகர் தேர்தலில் பகல் 1 மணிவரை 41.60% வாக்குகள் பதிவு
-ஆர்.கே.நகரில் 10 மணிவரை 10.99% வாக்குகள் பதிவு
-ஆர் கே நகரில் வாக்குப் பதிவு சரியாக போகிறது- தினகரன்
-வாக்களித்த பின் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் செய்தியாளர்களுடன் சந்திப்பு
-ஆர்.கே.நகரில் 77-வது வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது
-அதிமுக வேட்பாளர் மதுசூதனன் வாக்களித்தார்
-காலை 9 மணி நிலவரப்படி 7.32% வாக்குகள் பதிவு
-முதல் 1 மணிநேரத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் விறுவிறு வாக்குப் பதிவு
-வாக்குக்கு ரூ6,000; ரூ60,000 கொடுத்தாலும் திமுகவே வெல்லும்: வேட்பாளர் மருதுகணேஷ்
-ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்
-தினகரன் மீது பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் புகார்
-20 ரூபாய் நோட்டை கொடுத்து சீரியல் எண்ணை போனில் தெரிவித்தால் 1 ஓட்டுக்கு ரூ6,000 லஞ்சம் என புகார்
-3000-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்: கமிஷனர் விஸ்வநாதன்
-பழைய வண்ணாரப்பேட்டையில் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆய்வு
-ஆர்கே நகர் தேர்தல் முறையாக நடைபெறும் என நம்புகிறோம்: மருதுகணேஷ்
-வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு மருதுகணேஷ் பேட்டி
-பழைய வண்ணாரப்பேட்டையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வாக்களித்தார்
#RKNagarByPoll DMK candidate N. Marudhu Ganesh cast his vote at polling booth no. 134 in #Chennai, says "whether it is Rs 6000 or Rs 60,000, we are going to win; voters of RK Nagar will teach a lesson to AIADMK this time" pic.twitter.com/g58dCEZ4xc
— ANI (@ANI) December 21, 2017
-காலை 7.15 மணி முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று காத்திருந்தனர்
-ஆர்.கே.நகரில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க திரண்டனர்
- காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
#TamilNadu People queue up to vote in the #RKNagarByPoll in Chennai; visuals from a polling booth set up at Chennai Girls Higher Secondary School in Tiruvottiyur pic.twitter.com/XATxJpgYIq
— ANI (@ANI) December 21, 2017
- அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
#TopStory RK Nagar bypolls to take place today, the constituency was once held by late TN CM Jayalalithaa. AIADMK’s E. Madhusudhanan, Independent candidate TTV Dhinakaran and DMK’s N. Marudhu Ganesh among the top contenders (Visuals from a polling booth in #Chennai) #TamilNadu pic.twitter.com/4kxqC6U42O
— ANI (@ANI) December 21, 2017
- அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம், பாஜகவின் கரு. நாகராஜன் மற்றும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முக்கிய வேட்பாளர்கள்.
- மொத்தம் 2,28,234 வாக்காளர்கள் உள்ளனர்.
- ஆண் வாக்காளர்கள்; 1,10,903; பெண்கள்- 1,17,232; 3-ம் பாலினத்தவர் 99.
- 50 மையங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைப்ப்பு
- 258 வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியில் 1638 அலுவலர்கள்
- ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 15 துணை ராணுவப் படை வீரர்கள்