குடிக்கவே தண்ணி இல்ல… கலர் கலர் குடங்களுடன் பெண்கள் அன்றாடம் சாலை மறியல்: வீடியோ
தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு மிக மோசமாக இருப்பதால் பெண்கள் கலர் குடங்களுடன் அன்றாடம் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்தது முதல்வர் பழனிசாமி, "இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட மக்களின் தேவையை உணர்ந்து இந்த அரசு பணி செய்து வருகிறது. தமிழகத்தில் எங்கெல்லாம் குடிநீர் தட்டுப்பாடு இருக்கிறதோ அங்கெல்லாம் உடனுக்குடன் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
ஆனால். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் குடிநீர் பஞ்சம் மிக மோசமாக உள்ளது. குடிநீர் விநியோகம் இல்லை என்று கூறி பொதுமக்கள் அன்றாடம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், "எங்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. புழு வைத்த தண்ணீரைத்தான் வடிகட்டி எங்களது பிள்ளைகளுக்கு கொடுத்து வருகிறோம். மாதத்திற்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்தால் நாங்கள் என்ன செய்வது? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.