For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளை.. ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் அபேஸ்

திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஆயில் மில் பகுதியிலுள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில்தான் இந்த கொள்ளை நடந்துள்ளது. வங்கி இருக்கும் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடை ஒன்று இருந்துள்ளது. முதல் தளத்தில் வங்கி இருந்துள்ளது. அந்த கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் எளிதாக வங்கியை கொள்ளையடித்துள்ளனர்.

Robbers strike inside the Thiruvallur Bank Of India and looted Rs. 6cr worth Jewels

கடைக்குள் புகுந்து மேலே சுவரை இடித்து முதல் தளத்தில் இருக்கும் வங்கிக்கு சென்று நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனால் சுமார் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் இருந்த அடகு வைக்கப்பட்ட நகைகள் எல்லாம் கொள்ளை போயுள்ளன. இந்த விஷயம் இரண்டு நாட்களாக தெரியாமல் இருந்துள்ளது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று வங்கி திறக்கப்பட்டபோது நகைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.

நகைகள் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸ் சோதித்து வருகிறது.

English summary
Robbers strike inside the Thiruvallur Bank Of India and looted Rs. 6cr worth Jewels. Police investigate in the crime scene.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X