கோடை விடுமுறையும் அதுவுமாக ரோப் கார் சேவையை நிறுத்திய பழனி கோவில் நிர்வாகம்!
பழனி: பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை பராமரிப்பு பணிக்காக ஒருமாத காலம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் நிலையில் இந்த நேரம் பார்த்து ரோப் காரை நிறுத்தியுள்ளது அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு படிப்பாதை, வின்ச், ரோப்கார் என மூன்று பாதைகள் வழியாக செல்வது வழக்கம்.

ஊனமுற்றோர், முதியோர், குழந்தைகள் ஆகியோர் மலைக்கோவிலுக்கு செல்வதற்காக வசதியாக ரோப்கார் சேவை தொடங்கப்பட்டது, இந்த ரோப்கார் சேவையை தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்பொழுது மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஒருநாளும், ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஒருமாத காலமும் நிறுத்துவது வழக்கம். எப்போதும் ஜூன் மாதத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடத்துவது வழக்கம். ஆனால் தற்பொழுது ஒரு மாதத்திற்கு முன்பே ஆண்டு பராமரிப்பு பணிக்காக இன்று (08.05.15) முதல் ஒருமாத காலத்திற்கு நிறுத்தபட்டுள்ளது.
கோடை விடுமுறை என்பதால் பழனிக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ரோப் கார் நிறுத்தப்பட்டுள்ளதால் முதியோர், குழந்தைள், ஊனமுற்றோர் என அனைவரும் அவதி அடையும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications