For Daily Alerts
Just In
நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
Recommended Video
நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு- வீடியோ
நாமக்கல்: பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை போல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவத்திருந்தார்.
இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போதுதான் இந்த பரபரப்பு ஓரளவுக்கு ஓய்ந்துள்ளது.
இந்நிலையில் நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு மர்ம நபர்கள் சிலர் காவி உடை மற்றும் மாலை அணிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இந்த விஷம வேலையில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Saffron dress for Periyay, Anna and MGR statue in Namakkal. Police inquires who did this job.
Story first published: Thursday, March 15, 2018, 16:42 [IST]