பாபநாசம் மலைப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தல் - பொது மக்கள் அதிர்ச்சி
பாபநாசம் வனப்பகுதிகில் சந்தன மரக்கடத்தல் நடைபெறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை: பாபநாசம் வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டதால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலை அடிவாரத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் உள்ளது. இந்த கோயில் 10 சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்டது என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோயிலுக்கு செங்கோட்டையை சேர்ந்த கந்தசாமி என்பவர் தலைவராகவும், சிவந்திபுரம் நாரயணன் துணை தலைவராகவும் இருந்து வருகின்றனர்.

இந்த கோயிலில் தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடந்து வருகிறது. இந்த கோயிலில் உள் பகுதியில் அரிய வகை சந்தனம், தேக்கு உள்ளிட்டவை வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு அங்குள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் யாரோ வேரோடு அறுத்து எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சியம்மன் சாமி சிலையின் தலையை சில மர்ம நபர்கள் உடைத்து விட்டு உண்டியலையும் உடைத்து சென்றனர். இதில் ஈடுபட்டவர்களை இதுவரை அடையாளம் காணமுடியாத நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். போலீசார் விரைவாக விசாரணை நடத்தி இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications